முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் 18 பிரதிவாதிகளுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜார்ஜியா வழக்கறிஞர் “அடுத்த ஆறு மாதங்களுக்குள்” அவர்களின் விசாரணையை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஃபுல்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ் கூறுகையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் மற்றவர்கள் மீது கடந்த 2020 தேர்தலை முறியடிக்கும் முயற்சிகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் “தானாக முன்வந்து சரணடைய” ஆகஸ்ட் 25 வரை அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.