# Tags

மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட உந்துருளிகளை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும், 450 சி.சியை விடவும் அதிக இயந்திர வலுகொண்ட உந்துருளிகளை, உரிய முறையில் பதிவு செய்து பயன்படுத்துவதற்கான முறைமையை தயாரிக்குமாறு கோரி ஸ்பீட் ரைடர் மற்றும் விளையாட்டு சங்கங்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, அமைச்சரினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

வேகா கார்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

வேகா´ கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´வேகா´ காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் ´வேகா´ காரை வடிவமைத்த ஹர்ஷ சுபசிங்கவிடம் குறித்த இலக்க தகடு கையளிக்கப்பட்டது.