எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கிய ஐவர் கைது!

Date:

பேருவளை நகரின் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

தாக்குதலில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

QR குறியீட்டில் எரிபொருளைப் பெறச் சென்றபோது ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரைக்கமைய பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையில் குற்றப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...