கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி!

Date:

கணவரின் கை கால்களை சங்கிலியால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார்.

நினைத்தாலே பதற வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே 15 வயதுடைய உறவுப் பெண்ணுடன் கணவன் பாலியல் உறவு வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, கணவனின் கை மற்றும் கால்களை சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, பின்னர் அவரது ஆணுறுப்பை கத்தியால் வெட்டி எடுத்துள்ளார்.

இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட ஆணுறுப்பை தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், அதனை கழிவறைக்குள் வீசியுள்ளார்.

இதனால் கணவின் ஆணுறுப்பு, கழிவறை தொட்டிக்குள் உள்ளே சென்று விட்டது.

இதன்பின்னர் மனைவி நேராக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று , அங்கு தான் செய்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

ஆணுறுப்பை கழிவறையில் எதற்காக வீசினீர்கள் என்று காவல்துறையினர் கேட்டதற்கு, அதனை மீண்டும் சிகிச்சை மூலம் ஒட்ட வைத்து விட முடியும்.

இதனை தடுக்கத்தான் கழிவறைக்குள் வீசினேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

ஆணுறுப்பை இழந்த கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...