கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன்-மிருசுவில் பகுதியில் நேற்று(17) மதியம் 70 வயதான முதியவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறமாக நின்ற மாமரத்தில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.