கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

Date:

மொரகஹஹேன –  தலகல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மொரகஹஹேன, கிரிவத்துடுவ, யகஹலுவ பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

 

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபரின் வீட்டிற்கு பூஜைக்காக சென்று அந்த வீட்டின் மேன்மைக்காக சாந்திகர்ம பூஜை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அப்போது பூஜை செய்த நபர் முன்வைத்த தகாத யோசனை அந்த வீட்டுப் பெண்ணுக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறித்த நபர் ஏதோ செய்ததாகக் கூறி பிரதான சந்தேகநபர் நேற்று (18) மாலை மற்றுமொரு குழுவுடன் சென்று தாக்கிய சம்பவத்தில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தகாத யோசனை குற்றச்சாட்டை உயிரிழந்தவரின் உறவினர்கள் மறுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...