விபத்தின் பின்னர் பற்றி எரிந்த சொகுசு கார்

Date:

காலி, பலபிட்டிய ஏத்கந்துர பகுதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.

குறித்த சொகுசு மோட்டார் வாகனம் தொலைபேசி துாணில் மோதி விபத்துக்குள்ளானது.

பின்னர் மோட்டார் வாகனம் தீப்பிடித்து எரிந்ததாக அதன் சாரதி பொலிசாரிடம் தெரிவித்தார்.

மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்த போது அதனுள் சாரதி உட்பட மூவர் இருந்ததாகவும், விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....