தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகும் ஆசிய மேசை பந்து போட்டி தொடரில் இலங்கை வீர வீராங்கனைகளும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இவர்கள் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குகொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை போட்டியாளர்கள் மேலதிக பயிற்சிகளை சீனாவில் பெறவுள்ளனர்.
பயிற்சியை பெறும் 9 பேரை கொண்ட முதலாவது குழுவினர் நேற்றிரவு சீனா நோக்கி பயணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை நிறைவு செய்ததன் பின்னர் அவர்கள் செப்டம்பர் மாதம் இறுதியில் ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய தரப்பினர் நேரடியாக மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது