நிதி அமைச்சின் அறிக்கைக்காக காத்திருக்கும் அரசாங்கம்!

Date:

பல பில்லியன் ரூபா பெறுமதியான வாகன இறக்குமதி மோசடி தொடர்பான விசாரணையில் நிதி அமைச்சின் அறிக்கைக்காக, அரசாங்கம் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை நிதியமைச்சு சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதித் தடைக்கு மத்தியிலும் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதன் மூலம் அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...