மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Date:

மொரோக்கோவில் ஏற்பட்ட சக்கதிவாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது.

மொரோக்கோவின் ஹை அட்லஸ் மலைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம், மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள நகரமான மராகேச்சில் உள்ள வரலாற்று கட்டிடங்களை சேதப்படுத்தியது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,037 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 672 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில்  உணரப்பட்டது.

நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...