பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட சகல ரயில் தரப்பினரும் தற்போது சேவைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதான ரயில் மார்க்கத்தில் இரண்டு ரயில்கள் தவிர்ந்த ஏனைய சகல ரயில்களும் சேவையில் ஈடுபடுவதாகவும், இரவு நேர அஞ்சல் ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இன்று காலை முதல் ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.