சென்னையை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க நெதர்லாந்து கிரிக்கெட் அணியுடன் இணைந்துள்ளார்.
வலைப் பயிற்சியில் ஈடுபட தங்களுக்கு சில பந்துவீச்சாளர்கள் தேவை என சில நாட்களுக்கு முன்பு நெதர்லாந்து அணி விளம்பரம் செய்தது.
இதற்காக பலரும் தமது பந்துவீச்சு வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளனர். அதில் சென்னையை சேர்ந்த லோகேஷ் குமார் என்ற இளைஞரும் ஒருவர். அவர் தமிழக அளவில் ஐந்தாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவர் தனது சைனாமேன் ஸ்பின் பந்துவீச்சை வீடியோவாக பதிவுசெய்து அனுப்பியிருக்கிறார்.
Our first training session in India for the #CWC23 began with a small induction ceremony for our four new net bowlers from different parts of India. 🙌 pic.twitter.com/ug0gHb73tn
— Cricket🏏Netherlands (@KNCBcricket) September 20, 2023
இந்திய அணியில் அதிக சைனாமேன் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் லோகேஷ் குமார் எளிதாக நெதர்லாந்து அணியில் ஈர்க்கப்பட்டுள்ளார். அதை அடுத்து அவருக்கு நெதர்லாந்து அணியின் பயிற்சியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்துள்ளது. நெட் பவுலராக அவர்களுடன் அடுத்த இரண்டு மாதங்கள் அவர் பயணம் செய்ய இருக்கிறார்.
தமிழக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் ஆடினாலும், வருமானத்திற்கு ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் லோகேஷ். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே வேலையில் இருந்து கொண்டே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்திருக்கிறார்.




