இலங்கைத் தமிழர்களை ஏமாற்றிய சீமான்?

Date:

இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக இலங்கை தமிழர்களை சீமான் ஏமாற்றியுள்ளார் என உள்துறை செயலாளரிடம் வீரலட்சுமி புகார் மனு அளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமி புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த வீரலட்சுமி, “இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதாக கூறி இலங்கைத் தமிழர்களை சீமான் ஏமாற்றியுள்ளார். இப்போது, நல்லவர் போல வேஷம் போடுகிறார். இந்த விவகாரம் தொடர்பாக, உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளேன்.

எல்லா தேர்தலிலும் சீமானுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது. தேர்தல் செலவுகளை எப்படி பார்த்துக் கொள்கிறார். இலங்கை தமிழர்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளார்” என்று கூறினார்.

மேலும் “சீமான் தனது மனைவி பெயரில் கொடைக்கானலில் 6.5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதற்கு பணம் எப்படி வந்தது. இலங்கை தமிழர்களிடம் இருந்து பணத்தை பறித்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஊழல் என்று பேசும் சீமான், ஜெயலலிதா மற்றும் சசிகலா ஊழலை பற்றி பேசுவாரா? அப்படி பேசினால் தலைமை செயலகத்தின் முன்பு நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன்” என்றும் கூறினார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...