திடீர் ஒவ்வாமையால் மாணவி உயிரிழப்பு

Date:

அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹோமாகம, முல்லேகம பகுதியைச் சேர்ந்த தினிதி திமாரா என்ற பதினான்கு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று (18) காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அவர், தோழி ஒருவருடன் மாடியில் படித்துக் கொண்டிருந்த போது, ​​“அம்மா கை கொஞ்சம் வலிக்குது” என்று தாயிடம் கூறியுள்ளார்.

 

பின்னர், தா திடீரென வாந்தி எடுத்து தரையில் விழுந்த அவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் ஒருவெல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதையடுத்து, அவர் பரிசோதித்த வைத்தியர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...