கில்- தெவாட்டியா அதிரடி.. பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

Date:

ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். இதில் சகா 11 ரன்னில் வெளியேறினார். இதனையடுது கில்லுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 26 ரன்னில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த தமிழக வீரர் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார்.

இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....