மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கும் வெப்பநிலை !

Date:

வெப்பமான வானிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் வெப்பமான வானிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, வீட்டில் தங்கியிருக்கும் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதேவேளை, தற்போது நிலவும் வெப்பமான வானிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதிக வெப்பநிலைக்கு உள்ளாகும் வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்குமாறும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது வெப்பநிலையைக் கருத்திற் கொள்ளுமாறும் அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் சோர்வைப் போக்க இரண்டு நேரங்கள் சிறிய இடைவேளை எடுக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....