அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளது.
விமானத்தில் விமானி, வைத்தியர், தாதியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர்.
ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன.
சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்பு படையினர் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.