# Tags
#உலகம்

அமெரிக்காவில் விமான விபத்து : 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி-!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று, ஸ்டேஜ்கோச் நகரில் இருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளது.

விமானத்தில் விமானி, வைத்தியர், தாதியர், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் 5 பேர் இருந்தனர்.

ஆம்புலன்ஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிட்டன.

சுமார் 2 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மாயமான அந்த ஆம்புலன்ஸ் விமானம் ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்பு படையினர் அங்கு உடனடியாக விரைந்து சென்று பார்த்தபோது இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்துள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியாத நிலையில், அமெரிக்காவின் தேசிய விமான போக்குவரத்து ஆணையம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *