
கலேவெல மகுலுகஸ்வெவ – ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸ் சார்ஜன்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்ததாவது, விசாரணையின் போது அனுமதியின்றி வைத்திருந்த போர் 12 ரக 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மானை வேட்டையாட வந்தது, அவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட்டாக உள்ளமை, மேலும் மானைக் கொண்டு செல்லவும் பொலிஸ் சார்ஜன்களின் உதவியும் கோரப்பட்டதன் விவரங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வரும், இன்று (ஜூலை 26) தம்புள்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மகுலுகஸ்வெவ பொலிஸ் ஜீப் சாரதி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேத பரிசோதனையில், மான் போர் 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதும் உறுதியாகியுள்ளது.
சட்டவிரோத துப்பாக்கி வைத்தல் மற்றும் வனவிலங்குக் கொலை குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு சுமத்தப்பட்டுள்ளன.






