# Tags
#இலங்கை

5 கிலோ கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது

5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை சூட்சுமமாக கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரா நகர் வீதியில் வைத்து 51 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய மல்வத்தை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் குறித்த சந்தேக நபர் கைதானார்.

கைதான சந்தேக நபர் வசமிருந்து 5 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *