ஈரானில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுக்க விஷம் வைத்து கொல்ல முயற்சி

ஈரான் நாட்டில் சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் சிறுமிகளுக்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே கோம் என்ற நகரத்தில். பழமை வாய்ந்த இந்நகரில் சிறுமிகள் பாடசாலைகளுக்கு செல்வதை மர்ம நபர்கள் சிலர் விரும்பவில்லை. இதனை தடுக்கும் நோக்கத்தில் குறித்த சிறுமிகளுக்குவிஷம் வைத்துள்ளனர்.
பெண்கள் பயிலும் பாடசாலைகள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்புவது கண்டறியப்பட்டுள்ளதாகவும். இருப்பினும் விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சிலர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், விஷம் வைக்கப்பட்ட சம்பவம் வேண்டும் என்றே செய்யப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.