14 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய பணிப்பெண்!

Date:

சிலாபம் பகுதியில் ஓய்பெற்ற பொறியியலாளரின் வீட்டிலிருந்து சுமார் 14 இலட்சம் தங்க நகைகளை திருடிய இருவரை சிலாபம் தலைமையக பொலிஸ் குற்றப்புலானாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டில் பணிப்புரிந்து வந்த பெண்ணொருவரும், நகைகளை திருடி விற்பனை செய்ய உதவி புரிந்த நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் சிலாபம்-லங்சியாவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

75 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், சில மாதங்களுக்கு முன்பிருந்து அந்த வீட்டில் குறித்த பணிப்பெண் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டில் பணிபுரியும் போது, ​​தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை அவதானித்துள்ள சந்தேகநபர், இரண்டு தடவைகளில் 14 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, பிரதான சந்தேகநபரான பணிப்பெண் மற்றும் அவருக்கு உதவிய நபரையும் எதிர்வரும் 17ஆம் திகதி சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...