சில பெண்களின் மனப்பான்மை பிரச்சனைகளால், சரியான தேடலின்றி சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களைப் பயன்படுத்தத் தூண்டுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் இந்திரா கஹவிட்ட தொிவித்துள்ளாா்.
சுகாதாரப் பணியகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தொிவித்த அவா், இணையத்தில் இந்த க்ரீம் விற்கப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்டால் அதன் கருத்திடும் பகுதியில் விரைவாக வௌ்ளையாகுமா? விலை எவ்வளவு? என்பவை மாத்திரமே கோருகின்றனா்.
இந்த க்ரீம் பாதுகாப்பானதா? பதிவு செய்யப்பட்டுள்ளதா? அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என எவரும் கேள்வி எழுப்புவதில்லை.
வெள்ளையாக இருப்பது அழகின் உச்சம் என்ற மாயை தோன்றியுள்ளது.
எனவே தான் வேறு எதனையும் பாரால் வௌ்ளையானால் போதும் என்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த மானப்பான்மையை மாற்றிக்கொண்டால் இது போன்ற சிக்கல் நிலைமை ஏற்படாது என தோல் நோய் வைத்திய நிபுணர் இந்திரா கஹவிட்ட சுட்டிக்காட்டியுள்ளாா்.