பாடசாலை மீது தீவிரவாத தாக்குதல் – மாணவர்கள் உட்பட 40 பேர் பலி!

Date:

மேற்கு உகாண்டாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் குழு நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பாடசாலைக்குள் இரவு நேரத்தில் புகுந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழு இந்தத் தாக்குதலை நடத்தியது.

அந்த பாடசாலையில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்ததாகவும், மாணவிகள் உட்பட சிலர் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் பின்னர் கிளர்ச்சியாளர்களால் பாடசாலை கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...