மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது!

Date:

ஹொரணை பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை ஹொரணை தெல்கஹ கொடல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஹொரணை நகரிலுள்ள பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை இலக்கு வைத்து 250, 300 மற்றும் 500 ரூபா போன்ற விலைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

50 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....