கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடர்மழையால் ஓராண்டில் 22 லட்சம் பேர் பாதிப்பு

Date:

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்தவகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் தொடர்ச்சியான வெள்ளம், நிலச்சரிவுகளை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.வின் மனிதாபிமான நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஓராண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட நாடுகளில் தொடர்மழை, வெள்ளப்பெருக்கு ஆகிய காரணங்களால் சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு சுகாதாரம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் குறைபாடு நிலவுகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான மழைக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் வரை தீவிரமடையும் என்பதால் இடம்பெயர்தல் மேலும் அதிகரிக்கலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....