இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் , இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.
தொழிலதிபர் அதானியுடனான சந்திப்பில் அமைச்சர் காஞ்சனவும் கலந்துகொண்டார்.
கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி, 500 மெகாவாட் காற்றாலை திட்டம், மற்றும் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதற்கான புதுப்பித்தல் ஆற்றல் நிபுணத்துவத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட இலங்கையில் அபிவிருத்தி முதலீட்டு திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு பேச்சு நடத்தியுள்ளார்