ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் A அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை ஏ அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் A அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
323 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் A அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.