பண்டாரகம குங்கமுவ பிரதேசத்தில் கருங்கல்; பட்டறை ஒன்றில் இரகசியமாக பதுக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. பதுக்கி வைத்ததாக சந்தேகிக்கப்படும்; நபர் ஒருவர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருடன், 8 கிலோ அம்மோனியா, 500 கிராம் கருப்பு தூள் அல்லது துப்பாக்கி பவுடர், 444 கிராம் கன்பவுடர், 45 டெட்டனேட்டர்கள், 23 வாட்டர் ஜெல் கேப்சூல்கள், மற்றும் பல்வேறு அளவிலான சர்வீஸ் த்ரெட் 14 துண்டுகள் ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றினர்.
சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண புலனாய்வு பிரிவின் (77780) பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.