இந்தியாவுக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ஷேனுகா செனவிரத்னவை (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் .
வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஷேனுகா தற்போது ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்பான பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வரும் மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளார்