# Tags

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்

பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சரணடைந்த சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரரான பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார். கடந்த வாரம், யாழ். தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது. இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் […]

சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமிகள் மாயம்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசித்ததாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் […]

4 கோடி பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் மடகல் கடற்கரைப் பகுதியில் 126 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 10) இரவு பறிமுதல் செய்தனர். வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட SLNS Agbo நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கால் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான நான்கு சாக்குகளில் இருந்து 55 கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாப் பொதியின் மொத்த தெரு […]

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் […]

யாழ். மாநகர சபைக்கு புதிய மேயரை தெரிவு செய்ய தீர்மானம்

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ். மாநகர சபைக்கான புதிய மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம், எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் […]

யாழ். போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்த சில வைத்தியசாலையின் பினவரை ஊடாக வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளனர். அவர்களை தடுக்க முயற்சித்த காவலாளி மீது வாள்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது தெய்வாதீனமாக காவலாளி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலையில் உபகரணங்களுக்கு சேதம் ஏற்படுத்திய குறித்த நபர்கள் சிறிது நேரத்தில் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளனர்.  

வவுனியாவில் பஸ் துவிச்சக்கரவண்டி மீது மோதியதில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, ஏ9 வீதியில் உள்ள மூன்றுமுறிப்பு பகுதியில் துவிச்சக்கர வண்டியில் குடும்பஸ்தர் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்தபோது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று துவிச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக […]