
இன்று (17) காலை, நாராஹென்பிட்ட பகுதியில் கைது செய்யப்பட்ட நபர், சட்டவிரோதமாக அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை நாட்டிற்கு இறக்குமதி செய்து, அவற்றை ஹம்பாந்தோட்டை நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்த சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கிறார்.
மத்திய குற்ற விசாரணை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மாத்தறை மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்த, 40 மற்றும் 50 வயதான முகாமையாளர் மற்றும் களஞ்சியசாலை பராமரிப்பாளர் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.





