# Tags

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ரஷ்ய பிரஜை காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ பகுதியில் இன்று (மார்ச் 15) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ரஷ்ய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த வெளிநாட்டவர் பயணித்த கார், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, லொறி ஒன்றின் பின்னால் மோதியுள்ளது. குறித்த கார் பின்னதுவ நுழைவாயிலில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். விபத்தையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த […]

இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் பல்கலைகழகம்

ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் பூஜ்ய நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில், ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு […]